வியாழன், 15 ஏப்ரல், 2021

தாய்மையே கடவுள்

அவள் பூக்கும்போதே

பெண்ணாகிறாள்.


தன் கணவனுடன் 

கையை கோர்க்கும் 

போதே  முழுமதி

என்னும் ‌திருமதி

ஆகிறாள்.


தன் சிசுவை

சுமக்கும் போதே

தாயாகிறாள்.


ஆனால் தாய்மையால்

குழந்தையை காக்கும்

போதே கடவுள் 

ஆகிறாள்.


காப்பதே கடவுளெனில்

தாய்மையே கடவுள்.

4 கருத்துகள்: